உங்களின் பணத்தை அதிகரிக்க ஆன்மீக டிப்ஸ்

lakhsmi
நாம் மகிழ்ச்சியாக வாழ பணம் தேவையில்லை என்றாலும் நமது வாழ்வில் பொருள் சார்ந்த தேவைகளை பூர்த்தி செய்தால் மட்டுமே மனம் மகிழ்ச்சி அடைய செய்யும்  அதற்கு தேவைப்படுவது பணமே ஆகும்.

இப்போது நவீன சூழ்நிலையில் யார் எப்படி மாறுவார்கள் என்பது நாம் உடனே கூற முடியாது வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து கஷ்டங்களையும் தாங்கி மேல்நிலைக்கு வர தெய்வ நம்பிக்கையுடன் வழிபாடு செய்வதே சிறந்த முறையாகும்.

தெய்வ வழிபாடு நாம் செய்யும் போது அதற்கான ஆற்றலை நாம் பெறுவதுடன் சில தாந்த்ரீக முறையை பின்பற்றினால் வாழ்வில் என்றென்றும் மகிழ்ச்சியுடன் வாழலாம்.

நம் வீட்டில் பணத்தை அதிகரிக்கச் செய்வதில் பச்சைகற்பூரம் சிறந்த பரிகாரமாகும் மேலும் தெய்வீக  ஆற்றலைக் கொடுக்கும் தன்மை உடையதாகும்.

thirumal
நம் புராணங்களில் திருமால் நடத்திய லீலையில் திருமாலுக்கு உதடு கீழ்ப்பகுதியில் தாவாங்கட்டை  பகுதியில் ரத்தம் வந்துகொண்டே இருந்தது அதற்கு மருந்தாக பச்சை கற்பூரத்தை வைத்தனர் ரத்தம் நின்று போனது.

பச்சைக் கற்பூரத்தை வீட்டில் வைத்தாலே நேர்மறையான ஆற்றல் அதிகம் உற்பத்தி செய்ய பயன்படுகிறது.

valarpirai
வளர்பிறை நாட்களில் மூன்று பச்சை கற்பூரத்தை எடுத்து சிவப்பு பருத்தி துணியில் முடித்து நாம் வழிபடும் பூஜை அறையில் மகாலட்சுமியின் முன் வைத்து மேலும் கற்கண்டு வாழைப்பழம் வைத்து  நெய்வேத்தியம் படைத்து ஓம் மகாலட்சுமியை நமஹ என்று சில மணி நேரம் தியானத்தில் இருந்தால் உங்கள் வீட்டில் செல்வ கடாட்சம் அதிகரிக்க செய்யும்.

No comments

Powered by Blogger.