இப்போது இருக்கிற நவீன சூழ்நிலை காரணமாக வேகமாக ஓடிக்கொண்டு இருக்கிறோம் அதனால் நாம் சருமத்தை கவனிக்காமல் இருப்பதால் சருமத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றது அந்த பிரச்சனை என்னவென்றால் சருமம் மிகவும் வறண்டு சோர்வுற்ற நிலையிலும் மற்றும் வெடிப்புடன் காணப்படுகின்றது.
இந்த சரும பிரச்சனையை போக்குவதற்கு பல விலையுயர்ந்த கிரீம்களை பயன்படுத்துவதாலும் பாதிப்புகள் ஏற்படுகின்றது.
விலை அதிகம் இல்லாமல் மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து சரும அழகை மேம்படுத்துவது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
Cucumbers
குறிப்பு 1
வெள்ளரிக்காய் மற்றும் உருளைக் கிழங்கை எடுத்து மிக்சியில் போட்டு அரைத்து அதன் சாற்றை எடுத்துக் கொள்ளவும் அதை முகத்தில் தடவிக் சிறிது நேரம் வைத்திருந்து கழுவிக் கொள்ளுங்கள் இதனால் உங்கள் சரும அழகை மேம்படுத்தலாம்.
milk powder
குறிப்பு 2
வெள்ளரிக்காய் எடுத்து சற்று அரைத்துக் கொள்ளவும் பிறகு அதனுடன் தேவையான அளவு பால் பவுடரை அதனுடன் கலந்து கொள்ளுங்கள்.
இதை முகத்தில் தடவி வர முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகள் மறையும்.
குறிப்பு 3
புதினா இலைகள் மற்றும் வெள்ளரிக்காயை மிக்சியில் பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளுங்கள் வாரம் இருமுறை என முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தைக் கழுவி வாருங்கள் இதனால் முகத்தில் இருக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும் மற்றும் கரும்புள்ளிகளை நீக்கும்.
இந்த அழகு குறிப்புகளை பயன்படுத்தி பாருங்கள் கீழே இருக்கும் கமெண்ட் பாக்ஸ் இதுபற்றிய தகவலை தெரிவியுங்கள்.
Leave a Comment