முருகப் பெருமானின் விரதங்களும் அதற்கான பலன்களும்

lord murugan
சிவ குடும்பத்தில் ஒன்றாக விளங்கக் கூடியவர் முருகப் பெருமான் ஆவார் மேலும் சிவனின் நெற்றிக்கண்ணில் தோன்றியவர் .

தமிழ் கடவுள் முருகன் என்று அன்போடு அழைக்கப்படுபவர்.


மனதின்  விரதம் இருக்கும் போது தன்னிடம் உள்ள அசுத்தங்களை அகற்றி தூய்மை  அடைகின்றது.

lord kandha
முருகப்பெருமான் தோன்றியதற்கு காரணம் 

சர்வ வல்லமை படைத்த சுரனை அழிப்பதற்காக சிவபெருமானின் கோபத்தில் நெற்றிக்கண்ணிண் மூலம்  தோன்றியவர்.

சைவ சித்தாந்தம் சொல்லக்கூடிய பதி பசு பாசம் என்ற மூன்றும் அசுர வடிவத்தில் இருந்த சூரன் தாரகாசுரன் சிங்கமுகாசுரன் எனும்  இவர்களை அழித்தவர்.

இந்த மூன்று அசுரர்களை அழித்த  படலம் "கந்த புராணம்"  என்ற நூலில் உள்ளது.

இவ்வளவு சிறப்புமிக்க முருகப் பெருமானை நோக்கி விரதம் இருப்பது நமக்குப் பல்வேறு நன்மைகளை அளிக்கும்.

kantha sasti kavasam
மேலும் விரதங்களில் கந்த சஷ்டி விரதம் கார்த்திகை விரதம் வெள்ளிக்கிழமை விரதம் என மூன்றும் முக்கியம் வாய்ந்தவையாகும்.

தீபாவளி முடிந்து வரக்கூடிய ஆறு நாட்கள் கந்த சஷ்டி விரதம் ஆகும் இதை தொடர்ந்து ஆறு வருடம் இருந்தால் செல்வ செழிப்பு நமக்கு கிடைக்கும்.

விரதம் இருக்கையில் பதி பசு பாசம் தவிர ஆறுவகை எதிரிகளான காமம் கோபம் பேராசை மயக்கம் பெருமை செருக்கு இவற்றை எல்லாம் அழித்து இறை உணர்வை தூண்ட செய்கின்றது.

இந்த விரதத்தை எல்லாரும் அனுஷ்டிக்கலாம் இதற்கு அவரவர் தன்மைக்கேற்ப விரதத்தின் பலன்கள் அமைகின்றது.

தமிழ்க் கடவுளான முருகப் பெருமானை வழிபட்டு நாமும் அருளைப் பெறுவோம்.

No comments

Powered by Blogger.