விஷ்ணு அவதாரத்தில் கிருஷ்ணன் பிறப்பை கொண்டாடும் கோகுலஷ்டமி

baby krishna
மும்மூர்த்திகளில் ஒருவரான மற்றும் காக்கும் கடவுளாக இருப்பவர் விஷ்ணு ஆவார் மேலும்  உலகத்தை  காப்பதற்கு பத்து அவதாரங்களை எடுத்துள்ளார்.

இந்தப் பத்து அவதாரங்களில் ஒன்பதாவது அவதாரம் கிருஷ்ணர் ஆகும்.

இந்த அவதாரத்தில் இவர் செய்யாத சேட்டை இல்லை இந்த அவதாரத்தின் நோக்கமே கம்சனின்  அழிப்பதற்காக என்றாலும் மற்றொரு சகாப்தம் அதாவது மகாபாரதம் உருவாவதற்கு காரணமாக இருந்தவர்.

இவரது கிருஷ்ணன் அவதாரத்தை கொண்டாடுகிற வகையில் அவரது பிறந்த இடமான கோகுலத்தை வைத்து மற்றும் அஷ்டமி  திதியில் வருவதால் இது கோகுலாஷ்டமி என சிறப்பித்துக் கொண்டாடுகின்றனர்.

இந்தக் கிருஷ்ணன் அவதாரமானது முழுவதும் எம்பெருமான் ஈஸ்வரனின் உருவமாக இருந்தார்.

krishna
இவர் இந்தியாவில் மதுரா என்னும் நகரில் வளர்ந்து துவாரகையில் ஆட்சி செய்தார்  மேலும் அவதாரத்தின் இறுதிநாட்களில் சோமநாதர் ஆலயத்தில் ஈசனை வழிபட்டு வைகுண்டம் சென்றதாக கூறப்படுகிறது.

சிறப்பு மிகுந்த கோகுலஷ்டமி திருநாளில் ஸ்ரீமத் பாகவதம் மகாபாரதம் மற்றும் கிருஷ்ணனின் துதி போன்றவை ஜெபித்து மேலும் அவரது திருவுருவப் படத்திற்கு தீபம் காட்டி வழிபட வேண்டும் இதனால் கிருஷ்ணனின் அருள் நமக்குக் கிடைக்கும்.

krishna poojai
இந்த பூஜையானது கிராமப்புறங்களில் மாலையில் தான் செய்வார்கள்.

மனம் உருகி வேண்டிட எல்லாவிதமான செல்வங்களையும் மற்றும் அருளையும் கொடுப்பார் மேலும் கோகிலாஸ்டமியில் ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள தசம ஸ்காந்தம் விரதமிருந்து படித்தால் அழகான மக்கட்பேறு உண்டாகும்.

No comments

Powered by Blogger.