வீட்டில் பணம் நிலைத்திருக்க சில ஆன்மீக டிப்ஸ்

kuberar and maha lakshmi
அமாவாசை தினத்தன்று வீட்டின் வாசலில் கோலம் போடக்கூடாது மேலும் வீட்டில் இருக்கும் நபர்கள் தலைக்கு எண்ணெய் வைக்க கூடாது.

மேலும்  பூஜையை காலையில் செய்யாமல் இருப்பது நல்லது.

நமது வீட்டிற்கு வருகின்ற சுமங்கலிப் பெண்களுக்கு நீர் அல்லது உணவுகளை கொடுக்க வேண்டும் அதன்பின் குங்குமம் தர வேண்டும் இதனால் நம் வீட்டில் இருக்கிற ஜென்மாந்திர தரித்திரத்தை போக்கிக் கொள்ள முடியும்.

ருத்ராட்சம் மற்றும் துளசி மாலைகளை கோவிலுக்கு செல்லும் போது அணிவது சிறப்பு மற்ற நேரங்களில் அணியாமல் இருப்பது மிகவும் நன்மை தரும்.

கோயிலுக்கு செல்பவர்கள் ஆடம்பரம் இல்லாமல் செல்வது சிறப்பு மேலும் மது அருந்துவிட்டு  மற்றும் துக்க வீட்டிற்குச் சென்று  கோயிலுக்கு உடனடியாக செல்லக்கூடாது இது மீறிச் சென்றால் நமக்குப் பாவம் சேர்ப்பதோடு வீட்டில் தரித்திரம் உண்டாகும்.

deepam
வீட்டில் மாலை நேரத்தில் விளக்கேற்றியவுடன் தானமாக பால் தயிர் போன்ற பொருட்களை கொடுக்கக்கூடாது அப்படி மீறி கொடுத்தால் பணம் நம்மிடம் இல்லாமல் போகும்.

பூஜை செய்யும் பொழுது பெண்கள் முடியை விரித்து இருக்க கூடாது.

நமது வீட்டில் இருக்கும் பூஜை அறையில் விளக்கு ஏற்றி சிறிது நேரம் பிறகு  அணைப்பதற்கு வாயால் ஊதிக் அணைக்க கூடாது.

thulsi
வீட்டில் துளசிச் செடியை வைத்து பூஜை செய்ய வேண்டும் அப்படி செய்தால் வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்வார்கள்.

 ஒட்டடை மற்றும் அழுக்கு நிறைந்த வீட்டில் நேர்மறையான ஆற்றல் வீட்டில் தங்காமல் போய்விடும் அதனால் வீடு சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

No comments

Powered by Blogger.