திருவெண்காடு கோயில் வழிப்பட்டால் நம் பிறவி பாவங்களை நீக்கலாம்

thiruvengadu temple
நவகிரகத் தலங்களில்  புதனுக்கு உரிய தலமாக விளங்க கூடியது.

இங்கு மூலவராக வீற்றிருக்கும் இறைவன் பெயர் சுவேதாரண்யேஸ்வரர் ஆவார்

நால்வர் பாடல் பெற்ற தலமாகும்.

காசியை விட மூன்று மடங்கு பலனைத் தரக்கூடிய ருத்ர பாதம் இங்கு இருக்கிறது இதை முறையாக வழிபட்டால் நம்முடைய 21 தலைமுறை பாவ வினைகளை நீக்கும் என இந்தக் கோயில் இருக்கும் ஐதிகமாகும் .

புதனால் ஏற்படும் விளைவுகளை குறைப்பதற்கு இக்கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும்.

ஒவ்வொருக்கும் ராசிக்கட்டத்தில் புதன் திசை வரும்போது 17 ஆண்டுகள் இருக்கும் அதனால் நம் வாழ்வில் பல்வேறு மாற்றங்கள் அனுபவிக்க நேரிடும்.

thiruvengadu temple
திருவெண்காடு கோவிலுக்குச் சென்று அங்கே தனியாக விட்டிருக்கும் புதன் பகவானின் சன்னதியில் 17 தீபங்களை ஏற்றி மற்றும் அந்த கோயிலை  18 முறை சுற்றி வந்து வழிபட்டால் நம் வாழ்வில் வரும் துன்பங்களை  வராமல் தடுக்கலாம்.

மேலும் திருவெண்காட்டில் இருக்கும் புதன் பகவானை வழிபட்டால் ராஜயோகம் கிடைக்கும் என்பது நம்பிக்கை ஆகும்.

இத்தலத்தின் புராணப்படி கோயில் கொடிமரத்திற்கு அடுத்து அமர்ந்திருக்கும் நந்தி பகவானுக்கு ஒன்பது இடங்களில் ஈட்டியால் குத்தப்பட்டது போல் துளைகள் இருக்கும் காரணம் என்னவென்றால் அசுரனை எதிர்த்து போராடியதால் நந்திக்கு இவ்வாறு நடந்தது என்று கோவில் வரலாற்று குறிப்பு மூலம் நாம் அறிய முடிகிறது.

puthan
இக்கோயிலுக்குச் சென்றால்  உடனே புதன் பகவானை தரிசிக்க கூடாது முதலில் சிவபெருமானையும் அடுத்து உமாதேவியும் தரிசித்த பிறகே கடைசியில் புதனை தரிசித்து பரிகாரங்களை மேற்கொள்ளவேண்டும்.

No comments

Powered by Blogger.