நம் வீட்டின் பூஜை அறையில் தண்ணீர் வைத்தால் கிடைக்கும் அதிர்ஷ்டம்

pooja room
நம் பூஜை அறையில் வழிபாடு செய்யும் போது தெய்வங்களுக்கு நிவேதனம் படைப்பது உண்டு மேலும் யாரும் சுவைக்கப்படாத உணவுகளை வைத்து நாம் கடவுளுக்கு படைப்போம்.

பூஜை செய்யும்போது சிறு நேரம் தியானத்தில் இருக்க வேண்டும் அவ்வாறு தியானம் இருக்கும் பொழுது நமக்கு பிடித்தமான கடவுளின் மூல மந்திரமானது நாம்  உச்சரிக்க வேண்டும்.

இவ்வாறு நாம் சொல்லும் மந்திரத்தின் நேர்மறையான அதிர்வலைகளை பூஜை அறையில் வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரில் இறங்குகிறது .

pooja room
மீண்டும் பூஜை முடித்து அந்த தண்ணீரை நாம் பருகினால் பல்வேறு ஆற்றல்கள் மற்றும் நேர்மறையான எண்ணம் தோன்ற  வழிவகை செய்கிறது.

மேலும் இப்பூஜையில்  தீபம் காட்டி அறையில் வைத்திருக்கும் தெய்வ படங்களுக்கு அவர்களின் துதிப் பாடலை பாடி வழிபாடு செய்யவேண்டும்.

இரும்பு பொருட்களை பூஜைக்கு  பயன்ப்படுத்த  கூடாது காரணம் என்னவென்றால் அது எமனுக்கு உரியதாகும் மேலும் இது நேர்மறையான ஆற்றலை உள்வாங்க முடியாது அதனால் செம்பு அல்லது மண்பானைகளை பூஜைக்கு பயன்படுத்துவது சாலச் சிறந்தது.

hindhu pooja
ஒவ்வொரு நாளும் கண்டிப்பாக  பூஜை செய்ய வேண்டும் மேலும் பூஜையின் பொழுது தண்ணீர் வைக்க வேண்டும் அதை அடுத்த நாள் காலையில் நம் வீட்டின் மேல் ஊற்றி விட்டாள் அது நமக்குக் காப்பாக அமையும் மேலும் துஷ்ட சக்திகளை அண்டவிடாமல் செய்யும்.

இவ்வாறான நாள் தவறாமல் பூஜை செய்பவர் வீடுகளில் தெய்வ கடாட்சம் இருக்கிற வீட்டில் செல்வ செழிப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கும்.

தெய்வ சக்திகள் நிறைந்த வீட்டில் துஷ்ட சக்திகளுக்கு அனுமதி கிடையாது அதனால் மன மகிழ்ச்சி மட்டுமின்றி குபேரன் போல் வாழ்வார்கள்.

No comments

Powered by Blogger.